கோயம்புத்தூர், மார்ச் 31, 2025 – கோவை நேரு கல்வி குழுமம் சார்பாக, திருமலையாம்பாளையத்தில் உள்ள பி.கே. தாஸ் அரங்கத்தில், நிலையான வளர்ச்சிக்கான புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கத்தை வெற்றிகரமாக நடந்தி முடிந்தது. நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், நேரு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நேரு கட்டிடக்கலை பள்ளி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மூன்று நாள் நிகழ்வில், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உட்பட 1,050 பங்கேற்பாளர்கள் ஒன்று கூடி, நிலைத்தன்மையில் புதுமைகளைப் பற்றி விவாதித்தனர். இதில் அனைத்து துறைசார் கல்வியாளர்களும், வல்லுனர்களும் கலந்து கொண்டனர்.
நேரு தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் எம். சிவராஜா வரவேற்பு உரையை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து ஐ.சி.என்.ஜி.டி.எஸ். அமைப்புச் செயலாளர் டாக்டர் டி. ஜெயபிரகாஷ் மாநாட்டின் கண்ணோட்டத்தை எடுத்துரைத்தார் ஐ.சி.என்.ஜி.டி.எஸ். நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் பி. கிருஷ்ணகுமார், நிலைத்தன்மையில் புதுமைகளை வளர்ப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, தலைமை உரையை நிகழ்த்தினார். மலேசியாவின் சைன்ஸ் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் சுந்தரேசன் பெருமாள், தகவல் பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவோர் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். மலேசியாவின் மாரா பல்கலைக்கழக தொழில்நுட்பத்தில் உள்ள ஸ்மார்ட் உற்பத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரெங்கா ராவ் கிருஷ்ணமூர்த்தி, நிலையான வளர்ச்சியில் ஸ்மார்ட் உற்பத்தியின் பங்கு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். நேரு கல்வி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் (கல்வி மற்றும் நிர்வாகம்) டாக்டர் எச். என். நாகராஜா பாராட்டு உரையை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து, நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் பி. மணியரசன் வாழ்த்துறை வழங்கினார்.
மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சிறந்த எதிர்காலத்திற்கான புதுமையான தீர்வுகளில் ஈடுபட ஊக்குவித்தார். இந்த மாநாட்டில் நிலையான வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு, மின்சாரம் மற்றும் மின்னணு கண்டுபிடிப்புகள், ரோபாட்டிக்ஸ், தொடர்பு, வெப்பம் மற்றும் திரவங்கள், கட்டமைப்பு மற்றும் சிவில் பொறியியல், விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்பம், சுகாதாரம், நவீன அறிவியல், மனிதநேயம் மற்றும் நிலையான மேலாண்மை நடைமுறைகள் உள்ளிட்ட பல துறைகளில் விவாதங்கள் நடைபெற்றன. நேரு கட்டிடக்கலை பள்ளியின் இயக்குனர் அர். டாக்டர். அம்ருதாவின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.
Leave a Reply