பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பிரபல சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அவர் அத்தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்து அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த தீவை ஆட்சி செய்வதாக கூறிய நித்தியானந்தா, அங்கிருந்தே சொற்பொழிவு ஆற்றிவந்தார்.
இதற்கிடையே, கடந்த 2022ம் ஆண்டு நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், இத்தகவலை மறுத்த நித்தியானந்தா 27 டாக்டர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக வீடியோ எதிலும் நித்தியானந்தா தோன்றவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவில், ‘‘இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்’’ என கூறி உள்ளார். இதனால் நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நித்தியானந்தாவின் மறைவு கைலாஸா போல பிராங்க்காக இருக்கும் என பலரும் கூறி வரும் நிலையில், ஒரு வேளை அவரது மறைவு உண்மையாக இருந்தால், அவருடைய 4000 கோடி ரூபாய் சொத்துகள் யாருக்கு போகும் என்ற கேள்வியும் இணையத்தில் உலவுகிறது.நித்யனந்தாவின் பிரதான சிஷ்யையாக அறியப்படும் நடிகை ரஞ்சிதாவிடம் தான் அந்த சொத்தின் உரிமை உள்ளது என ஒரு சில ஊடகங்கள் கூறுகின்றன.மறுபுறம், புலனாய்வுத்துறை வழக்குகள் அவர் மேல் இருப்பதால் அவரது சொத்துகள் அனைத்தும் அரசு வசமே செல்லும் எனவும், வழக்கு முடிந்த பின்னர் தான் அடுத்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.
நித்தியானந்தாவின் 4 ஆயிரம் கோடி சொத்து… ரஞ்சிதா கைப்பற்றி விட்டாரா?

Leave a Reply