நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ” தேர்தல் ஆணையம், சிபிஐ., போன்ற அமைப்புகள் தன்னாட்சி பெற்றது என்று நினைக்க வேண்டாம். அவர்கள் பாஜக, அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்கள். விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டுவிட்டது. அந்த கட்சி போட்டியிடவே இல்லை. சின்னத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே சீமான் விவசாயிதான்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் கிடைத்துள்ளது. ஜி.கே.வாசனுக்கு சைக்கிள் சின்னம் கொடுத்துள்ளனர். வேறு மாநிலங்களில் சைக்கிள் சின்னம் இல்லையா? நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளது. ஆகப்பெரும் புரட்சியாளர்கள் தங்கள் முழக்கத்தை இந்த கருவியில் தான் முன்வைத்தனர். கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்; ஆனால் நான் சமரசம் செய்ய மாட்டேன். தனி மனிதனாக 7% ஓட்டு வாங்கியதால் வியப்படைந்துள்ளனர். அதனால் தான் இப்படி செய்கின்றனர்.
எங்களை உரசினால் பற்றி எரிவோம். எங்களை எரித்துக் கொண்டு உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுப்போம் என்பதை வலியுறுத்த தீக்குச்சி சின்னத்திற்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த உடனே அந்த சின்னத்தையும் வேறொருவருக்கு கொடுத்துவிட்டார்கள். பார்த்துக் கொள்வோம்.” என்று பேசினார்.
Leave a Reply