“
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற,
தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வை திட்டங்களில் ஒன்றான,கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளை,இளைஞர்களை
மிகப்பெரிய சிறந்த தொழில்முனைவோராக மாற்றும் சிறந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டமான,
“நான் முதல்வன் திட்டத்தின்”கீழ் நடத்திய,
உணவு பகுப்பாய்வு, தரக் கட்டுப்பாடு மற்றும் தர ஆராய்ச்சி பாடத் திட்டத்தின்,
அதிகாரபூர்வ பயிற்சி பங்களிப்பாளர் “RAREMIND நிறுவனம் நடத்திய சிறப்பு வகுப்புகளில் வெற்றி பெற்ற “HACKATHON” வெற்றியாளர்களுக்கு,
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி,வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.மேலும் “RAREMIND” நிறுவனத்தின் C.E.O.மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சுபாஷிணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம. சண்முகசுந்தரம்,பாரதியார் பல்கலைக்கழக பல்வேறு துறைத் தலைவர்கள்,பேராசிரியர்கள், பேராசிரியைகள், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள்,கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி புஷ்பராஜ், மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் நெசவாளர் அணி வி.மணி, இலக்கிய அணி ராஜ்குமார்,38வது வட்டக் கழகச் செயலாளர் தெய்வம் மகாலட்சுமி, 36வது வட்டக் கழகச் செயலாளர் விஸ்வநாதன்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சின்னத்தங்கம், வடக்கு மாவட்ட அணி நிர்வாகி வேலுச்சாமி, மருதமலை மகேஷ்குமார்,நிர்வாகிகள் சாந்தாமணி , செல்வி,தெய்வம் ஜெயசூர்யா, சின்னசாமி, மருதமலை குப்புசாமி, பூபதி, ஆனந்த், குமாரசாமி, செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, தேவராஜ், வெங்கிடுசாமி, மனோகரன், கார்த்தி, ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply