நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும் சமூக வலைதளங்களில் என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்வதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் கவுண்டம்பாளையம் திரைப்பட படக் குழுவினர் சாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித்,கவுண்டம்பாளையம் திரைப்படம் நீண்டகால பிரச்சனைக்கு பிறகு நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஆதரவளித்த மக்களுக்கு நன்றி.திரையரங்குகள் குறைவாக கிடைத்ததில் பெரிய அதிர்ச்சி எதுவும் இல்லை. இது எதிர்பார்த்தது தான்.யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை ஆனால் சிறகுகள் உடைக்கபடுகிறது என்பதை உணர்கிறேன்.நான் பிறந்த கோவை மாவட்டத்திலும் குறைந்த திரையரங்குகள் கிடைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
பெற்றோர்களுக்காகவும் குடும்பங்களுக்காகவும் தான் இந்த படத்தில் செய்தி சொல்ல வருகிறேன். என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. என்மீது சமூக வலைதளங்களில் திரித்து கூறப்படுகிறது. ஆணவ கொலைக்கு எதிரானவன் நான் அல்ல.இந்த படத்தில் அறிமுகமாகியுள்ள ஹீரோ ஹீரோயின் இருவரும் நன்கு நடித்துள்ளார்கள்.வில்லன் கதாபாத்திரமும் நன்றாக நடித்துள்ளார். திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்.சென்சார் போர்டு சர்டிபிகேட் இருந்தும் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.இருப்பினும் நாங்கள் தோல்வியடையவில்லை.இப்படத்தை பார்த்த மக்கள் பாராட்டுகிறார்கள். அதுவே எங்கள் வெற்றி. என தெரிவித்தார்.
Leave a Reply