நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது

Spread the love

தில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கினார். குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார் நடிகர் அஜித் குமார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்குகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெடு வீரர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

1993ஆம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் silver screen-ல் காலடி எடுத்து வைத்த அஜித் குமார், ‘Good Bad Ugly’ என இதுவரை 63 படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமன்றி, ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் எம்.ஐ.டி குழுவிற்கு ஆலோசகராகச் செயல்படுகிறார். மாநில அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டியில் பங்கேற்றுத் திறமை வெளிப்படுத்தியுள்ளார். மோட்டார் சைக்கிள் பயணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். கார் பந்தயப் போட்டிகளில் சர்வதேச அளவில் பல சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

பல துறைகளில் தனித்திறமையை வெளிப்படுத்தி வருகிற அஜித் குமாருக்கு, மத்திய அரசு ‘பிரபல தமிழ் நடிகர்’ மற்றும் ‘கார் பந்தய ஓட்டுநர்’ எனும் அடையாளத்துடன் கலைப் பிரிவில் ‘பத்ம பூஷண்’ விருதை வழங்கி கெளரவித்துள்ளது.