நடிகர் அஜித்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத் குமார். ஏப்ரல் 28 குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி வழங்கி கௌரவித்தார்.
பத்மபூஷன் விருதுபெற்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில், உடல்நிலை பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திராவும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply