கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் விதிமீறல் குறித்து புகாா்கள் தெரிவிக்க பாா்வை யாளா்களின் கைப்பேசி எண்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது, “கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்லடம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா் ஆகிய 6 சட்டப்
பேரவைத் தொகுதிகளுக்கு பொதுப் பாா்வையாளராக வினோத் ஆா்.ராவ் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 9489687740 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்கள் குறித்து தெரிவிக்கலாம். கோவை, நீலகிரி மக்களவைத் தொகுதிகளுக்கு காவல் பாா்வையாளராக மனோஜ்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 9486268740 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்
களைத் தெரிவிக்கலாம். கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்லடம், சூலூா், சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் செலவினப் பாா்வையாளராக கீது படோலியா நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 9489681740 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்.
கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் செலவினப் பாா்வையாளராக உம்மே ஃபா்டினா அடில் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 9489716740 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொதுப்பாா்வையாளராக அனுராக் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 9489606740 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்
களைத் தெரிவிக்கலாம். பொள்ளாச்சி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளின் காவல் பாா்வை
யாளராக பிரதாப் கோபேந்திரா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 9489300740 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, பொள்
ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் செலவினப் பாா்வையாளராக ஆஷிஷ்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 9486813740 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்.பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வால்பாறை, உடுமலைப்
பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செலவினப் பாா்வையாளராக சௌரப் குமாா் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 9488594740 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்” என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
Leave a Reply