தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ராமானுஜ நகர், பங்காருலே-அவுட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அஷ்ட காலபைரவர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அன்னதானம் நடைபெற்றது. நீண்ட ஆயுள், பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், சொத்துகள், குலம் மற்றும் உடைமைகளை காப்பது ஆகியவற்றிற்கான சிறப்பு தெய்வம் கால பைரவர். இவரை மனதால் நினைத்தாலே போதுமானது என்பது ஐதீகம் என்றாலும் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுதல் பக்தர்கள் வழக்கம். அபிஷேகத்தில் புளிக்காத, கரும்பு சாறு சேர்த்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு அருளும் கால பைரவர், அவர்களின் எதிரிகளிடமிருந்தும் காப்பார் என்பது நம்பிக்கை. பெண்களைப் பாதுகாக்கும் சிறப்பு தெய்வம் இவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இந்த விழாவில் கோவை நேரு நகர் லயன்ஸ் கிளப் சார்பில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் அருள் பெற்றனர்.
Leave a Reply