, ,

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்

nkarthik
Spread the love

கோவை சுங்கம் பகுதியில் சிவராம் நகர் உள்ளது. இப்பகுதியின் பொதுமக்கள் சார்பில் சிவராம் நகர் நல சங்கம் செயல்பட்டு வருகிறது. 225 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 15 வருடங்களாக மாநகராட்சி தூய்மை பணியாளராக பாப்பம்மாள் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பாப்பம் மாளுக்கு மருத்துவ உதவித் தொகையாக,சிவராம் நகர் குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.1,10,500 உதவித் தொகையை இன்று வழங்கினர். சிவராம் நகர், கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்ற நிகழ்வில் பாப்பம்மாளுக்கு ஒரு லட்சம் ரூபாயை கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.

இந்த நிகழ்வில்,சிவராம் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் எத்திராஜ், செயளாலர் கீர்த்தன், பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர்கள் சிஜே.ரகுநாதன், ஏ.எஸ்.இளங்கோ, எம்.தக்ஷன்,செல்வராஜ் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.