துடியலூர் பேருந்து நிலையத்தை ரூ.1 கோடி மதிப்பில் மேம்படுத்த கோவை மாநகராட்சி திட்டம்

Spread the love

கோவை மாநகரில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட ஏழு இடங்களில் பேருந்து நிலையங்கள் உள்ளன. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. வெள்ளலூர் பகுதியில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவையில் உள்ள 7 பேருந்து நிலையங்களையும் மாநகராட்சி சீரமைக்க உள்ளது. அந்த வகையில் துடியலூர் பேருந்து நிலையத்தை ரூ.1 கோடியில் மீண்டும் மேம்படுத்த கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

துடியலூர் பகுதியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, துடியலூர் சந்திப்புக்கு அருகில் துடியலூர்-சரவணம்பட்டி சாலையில் அமைந்துள்ள துடியலூர் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

தற்போது இயங்கும் பேருந்து நிலையம் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் ஓய்வெடுக்க தனி வசதிகள் இல்லாமல் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், எதிரே உள்ள பொது கழிப்பறை பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

பயணி ஒருவர் கூறுகையில்: “அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை. பேருந்து நிலையத்திற்குள் வீடற்ற தனிநபர்கள், சில நேரங்களில் குடிபோதையில் இருப்பவர்களும் இடத்தை ஆக்கிரமித்து கொள்வதால், பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.”

பேருந்து ஓட்டுநர் கூறுகையில்: “பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிற்கின்றன. ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஓய்வெடுக்க இடம் இல்லை. பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பொது கழிப்பறை பராமரிக்கப்படாமல் உள்ளதாக கூறுகிறார்.”

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; கோவை ஆணையாளர் வாக்குப்பதிவு

மாநகராட்சியின் பொறியியல் அதிகாரி பேசுகையில்: “இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.”

கூடுதல் இருக்கைகள், தங்குமிடம், பேருந்து சேவை, நேரத் தகவல்களுடன் கூடிய காட்சிப் பலகை இடம்பெறும். மேலும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ளது போல உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். தற்போது இவை பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.