, , , ,

திருப்பரங்குன்றம் முருகன் மலை விவகாரம் – விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சாமிகள் கண்டனம்

babuji swamigal
Spread the love

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மதுரை திருப்பரங்குன்றம் முருகன் மலை மேல் உள்ள தர்காவிற்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி  குழுவினருடன் சென்று பிரியாணி சாப்பிட்டது -மற்றும் ஆடு கோழி பலி கொடுக்க வேண்டும் என்று பிரச்சனை செய்தது கண்டனத்திற்குரியது என்று நிலவேம்பு சித்தர் விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்ரீ லாஸ்ரீ பாபுஜி சாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆறிக்கையில், “பொதுவாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு திருமுருகாற்றுப்படை நக்கீரனும் மற்றும் தொல்காப்பியரும் தமிழ் இலக்கியங்களும் மதுரையின் திருப்பரங்குன்றம் மதுரையின் பெருமையை எடுத்துரைத்துள்ளனர் கடந்த ஒரு 500 ஆண்டுகளுக்கு முன்பாக மரணமடைந்த ஒரு இஸ்லாமியருடைய சமாதியை வைத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்வது முட்டாள்தனமானது.
தமிழகத்தில் இருக்கும் இந்துக்கள். இந்து மதத்திற்கும் ஆலயத்திற்கும் எந்தவித பிரச்சனை வந்தாலும் சகிப்புத்தன்மையுடன் பொறுமையுடன் இருக்கிறார்கள் என்பதற்காக எல்லா விஷயங்களிலும் அவர்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். பொதுவாக முஸ்லிம் மக்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாமிய மார்க்கத்தில் தர்கா வழிபாடு என்பது குர்ஆனுக்கும் நபிகள் நாயகத்தின் உடைய கோட்பாடுகளுக்கும் எதிரானது.இதை உண்மையான இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி இருக்கின்ற பட்சத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்கின்ற ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி அவர்கள் ஒரு மதம் சம்பந்தமான பிரச்சனைக்கு அவர் சென்றதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு இஸ்லாமிய மதவாதியாக செல்வதில் தவறில்லை. இன்று தமிழகத்தில் இருக்கின்ற இந்துக்கள் எல்லோரும் இந்த மோசமான சம்பவத்தால் மனம் வேதனை பட்டுள்ளனர்.ஒரு சில இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சதி திட்டத்தால் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் மதப் பிரச்சினை ஏற்பட்டு தமிழகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. தற்போது கடந்த 1994 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஆனால் மேலே உள்ள தர்காவில் நடைபெறும் வழிபாட்டை காரணம் காட்டி முருகனின் மலைமேல் முருக பக்தர்கள் கார்த்திகை தீபம் ஏற்ற முடியாமல் வேதனை பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். தமிழக அரசு தமிழக காவல்துறை இந்துக்களை ஒருதலை பட்சம் ஆகாமல் நடத்தாமல் உரிய உரிமையை தந்து திருப்பரங்குன்றம் முருகன் மலை மேல் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குமாறும்.தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையோடு இருக்க மூன்று மதங்களைச் சேர்ந்த தமிழகத்தின் தலைசிறந்த பொது தலைவர்களை ஒரு குழு அமைத்து திருப்பரங்குன்ற முருகன் மலைமேல் உள்ள பிரச்சனையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பின் நிறுவன தேசிய .பொதுச் செயலாளர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கேட்டுக்கொண்டார் .