, , , ,

திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல் நிலைப் பள்ளியில் – சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம்.

madhurai 3
Spread the love

திருச்சுழியில், சமூக நீதிக் கான விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. விருதுநகர் காவல் நிலையம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக, சமூகநீதி விழிப்புணர்வு கூட்டம் திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல் நிலைப் பள்ளியில் நடை பெற்றது. பள்ளித்தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் வகுலாதேவி, தங்கபாண்டி, சந்திரசேகர், புள்ளியியல் ஆய்வாளர் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த சேவைமைய ஜோஸ்மின்மேரி, தலைமை காவலர் நீலவேணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு, இளம் வயதில் திருமணம் தவிர்த்தல், செல்போன் பயன்பாடுகளை தவிர்த்தல், பெண் கல்வி ஊக்குவிப்பு, பொருளாதார முன்னேற்றம், திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசின் உதவித் திட்டங்கள் மாணவர்களின் சென்று சேர்கிறதா என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *