,

திமுக ஆட்சி விரைவில் ஒழியும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

sp velumani
Spread the love

மொழிபோர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரத்ஹ்டில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் டி.ஜேம்ஸ்ராஜா தலைமையிலும், சட்டமன்ற உறுப்பினர் விபி.கந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் ஏ.வெங்கடாலம்,  கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆர்.சந்திரசேகர், குனியமுத்தூர் பகுதி செயலாளர் தி.மதனகோபால், இளைஞரணி மாவட்ட தலைவர் டி.கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கருடா சுரேஷ்  ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றுகையில்,
1938 முதல் 1965 வரை பல்வேறு காலகட்டங்களில் ஆதிக்க இந்தி மொழி திணிப்பு தமிழ்நாட்டில் நுழைந்த போதெல்லாம் இந்தியை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த மொழிப்போர் போராட்டத்தில் குறிப்பாக தாளமுத்து, நடராசன், கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, திருச்சி ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி, உட்பட பலர் வீரமரணம் அடைந்தனர்.
திமுகவிற்கு விரும்பி யாரும் வாக்களிப்பதில்லை.  பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக கடந்த 3 ஆண்டுகளில்  ஏதாவது திட்டம் தந்துள்ளனரா? எதையும் சொல்லமுடியாது.  ஆனால் அதிமுக ஆட்சிகாலத்தில் எத்தனை திட்டங்கள். 50 ஆண்டுகள் காணாத வளர்ச்சியை தந்தோம். அரசு மருத்துவமனை சீரமைப்பு, கூட்டுகுடிநீர் திட்டம், விமான நிலையம் விரிவாக்கம், 6 அரசு கலைக்கல்லூரிகள், சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு அவினாசி திட்டம், பள்ளி கட்டிடம், தாலுகா அலுவலகம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
கோவையில் காவல்துறை உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா திமுகவின் மாவட்ட செயலாளராக செயல்படுகிறார். அதிமுகவினர்  எங்காவது கொடிகம்பம் போட்டால் அங்கு வந்து தடுக்கிறார். ஆனால் திமுகவினர் எங்கு வேண்டுமானாலும் பிளக்ஸ் வைக்கலாம் , கொடிகம்பம் போடலாம். அதிமுகவினர் அவர்கள் சொந்த இடத்தில் பிளக்ஸ் வைத்தாலே தடுக்கிறது காவல்துறை. மேலும் சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் காவல் உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இட பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வசூல் செய்கிறார்.
விஜிலென்ஸ் போலீசார் இந்த காவல்துறை உதவி ஆணையாளர் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். அவரிடம் என்ன சொத்து எவ்வளவு வசூல் செய்துள்ளார் என சோதனையில் ஈடுபட வேண்டும். நான் பார்த்ததிலே மோசமான காவல் உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா தான். மக்களை பாதுகாப்பதற்கும், சமூக விரோத செயல்களை தடுப்பதற்கும்தான் காவல்துறை. ஆனால் மாமூல் வாங்குவதற்கு மட்டும் காவல்துறையா?. காவல்துறை ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டமன்றத்தில் இது குறித்து பிரச்சனை வெடிக்கும்.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீ மக்களுக்கு பாதுகாப்பு தரத்தான் காக்கிசட்டை அணிந்திருக்கிறாய். நியாயத்திற்கு புறம்பாகவும், சட்டத்திற்கும் புறம்பாக நடந்தால் காக்கிச்சட்டை அணிய முடியாது. மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.யாரை கேட்டாலும் காவல்துறை மீது பலத்த குற்றச்சாட்டு. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுஉள்ளது. இது தான் திமுக ஆட்சி. யாருக்கும் பாதுகாப்பில்லை.
கோவை மாவட்டத்தை திமுக அரசு முழுமையாக புறக்கணிக்கிறது. இதற்கெல்லாம் முடிவு காலம் வரும். நாடாளுமன்றம் தேர்தல் வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் யாரை எடப்பாடியார் வேட்பாளராக நிறுத்துகிறார்களோ அவர் மாபெரும் வெற்றி பெறுவார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 40 லும் வெல்வோம். சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சியை  அமைப்போம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மீது பொய் வழக்கு போடுகிறார்கள் திமுகவினர். அவர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சில பணிகளுக்காக நிதி ஒதுக்கிறார். 3 மாதங்கள் கடந்தும் கூட நகராட்சி திட்ட அறிக்கை தரவில்லை. நகராட்சி ஆணையாளரை சந்தித்து இதுகுறித்து கேட்கிறார். ஆணையாளரிடம் சண்டையிட்டது திமுக சேர்மன் மற்றும் உறுப்பினர்கள்.
ஆனால் ஆணையாளரை மிரட்டுவதாக  எங்களது சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போடுகிறார்கள். மக்கள் பணிக்காக ஆணையாளரை பார்க்க எம்.எல்.ஏ. க்கு உரிமை இருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை கூறினால் வழக்கு என்றால் தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் நிலை என்ன. இதற்கெல்லாம் விரைவில் முடிவு வரும். ஒட்டுமொத்தமாக மக்களும் முடிவு செய்துவிட்டார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிதான். மறந்துவிடாதீர்.” என்று பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க.அசோகன், மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் டி.சந்திரசேகர், சுசிலா மாணிக்கராஜ், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கேபி.துரைசாமி, மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.