, , ,

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம்

annamalai
Spread the love

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.

​சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவிக்கு ஞானசேகரன் எனும் நபரால் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  அந்த எஃப் ஐ ஆர் நகல் எப்படி இணையத்தளத்தில் வெளிவந்தது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல் ஆணையர் அல்லது  குறைந்த பட்சம் துணை காவல் ஆணையர் பதவி பறிக்கப்படவேண்டும் என்றார்.

இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் பதிவேற்றம் செய்தவுடன் அது பிரதான சர்வருக்கு செல்லும். இப்படி இருக்க எப்படி அந்த எஃப் ஐ ஆர் வெளியே வரும். காவல் துறையை தவிர இதை வெளியே கசிய விட வேறு யாரால் முடியும்? அந்த எஃப் ஐ ஆர் எழுதியது முறையாக எழுதப்படவில்லை.  அந்த எஃப் ஐ ஆர் இணையத்தளத்தில் கசிந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல் முழுவதும் வெளிவந்தது.

இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன். ஒரே இடத்தில் கூடாமல் பாஜகவினர் ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் முன் நின்று போராட்டம் நடத்துவோம். 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை நடத்த முடியுமா. திமுக உண்மையான அரசாக இருந்தால் 15 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும். 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகிறேன் என்று சபதம் எடுத்துள்ளார்.