திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் பதிவேற்றம் செய்தவுடன் அது பிரதான சர்வருக்கு செல்லும். இப்படி இருக்க எப்படி அந்த எஃப் ஐ ஆர் வெளியே வரும். காவல் துறையை தவிர இதை வெளியே கசிய விட வேறு யாரால் முடியும்? அந்த எஃப் ஐ ஆர் எழுதியது முறையாக எழுதப்படவில்லை. அந்த எஃப் ஐ ஆர் இணையத்தளத்தில் கசிந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல் முழுவதும் வெளிவந்தது.
இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன். ஒரே இடத்தில் கூடாமல் பாஜகவினர் ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் முன் நின்று போராட்டம் நடத்துவோம். 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை நடத்த முடியுமா. திமுக உண்மையான அரசாக இருந்தால் 15 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும். 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகிறேன் என்று சபதம் எடுத்துள்ளார்.
Leave a Reply