, , ,

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட ஆதிமுகவினர் கைது

s p velumani
Spread the love

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பாக முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளரும், கொறடாவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை முழக்கி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிமுக தலைமை நிலையம் எஸ் பி வேலுமணி, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் சி. தாமோதரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.
பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “யார் யார் இருக்கிறார்கள் என்று உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்று எங்களது பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பினார்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் அந்த கேள்வி ஒளித்துக ்கொண்டிருக்கிறது.
உண்மை குற்றவா ளிகளை கண்டறிய வேண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது திமுக ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று கல்லூரி மாணவி மோசமான நிகழ்வுக்கு ஆளாகிறார்கள் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க கோவை தெற்கு மாவட்டம் சார்பாக பொள்ளாச்சியிலும் மேலும் கோவையில் கோவை மாநகரம் கோவை வடக்கு மூன்று இடங்களில் நடக்கிறது தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு அதிமுக தொண்டர்களும் தோழர்களும் பொதுமக்கள் கலந்து கொண்டு நியாயம் வேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்தினார்கள் ஆனால் காவல்துறை அதற்கு அனுமதிக்காமல் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இதே போல அனைத்து பொது மக்களையும் கைது செய்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் யார் அந்த சார் என்று எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நிறைய பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதேபோல அந்த கேள்வி கேட்கின்ற இளைஞர்களின் மாணவர்களையும் அதிமுக ஐடிவி நிர்வாகிகளின் ஓடி ஓடி போய் கைது செய்கிறார்கள் மிரட்டப்படுகிறார்கள் எங்க பார்த்தாலும் பெண்கள் பாலிகளுக்கு ஆளாகிறார்கள். ஆறு வயதிலிருந்து 60 வயது வரை. அதேபோல காவல்துறையில் இருக்கிற பெண்களுக்கு கூட இதே போன்ற இதேபோன்று ஏற்பட்டுள்ளது ஆனால் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் கவலைப்படாமல் கேள்வி கேட்பவரை இன்றைக்கு கைது செய்து துன்புறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடத்தி இருக்கிறார்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதும் சரி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும் போதும் காவல்துறை சுயமாக செயல்பட்டது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொண்டது குற்றங்கள் குறைவாக நடந்தது இன்று எங்கு பார்த்தாலும் கஞ்சா வைக்கிறார்கள்
அதேபோல எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் இதை வன்மையாக கண்டிக்கிறோம் உடனடியாக காவல்துறை உயர்த்திக்கொண்டு இந்த அரசு விழித்துக் கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்ட யார் அந்த சார் என்பதை உடனடியாக வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.