தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நான்காண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் மசக்காளிபாளையம் சாலை பாலன் நகர் அருகில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் விளக்க துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன், பீளமேடு பகுதி -1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், வட்ட செயலாளர் கி.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திமுகவின் நான்காண்டு சாதனையை கொண்டாடினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா கார்த்திக்

Leave a Reply