,

தாமரை நாட்டிய நிருத்யாலயா மாணவிகளின் அரங்கேற்றம்

bharathanatyam
Spread the love

தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் உள்ள தாமரை பன்னாட்டுப் பள்ளியின் தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் நிர்மலா வெங்கடேசன் தம்பதியரின் மகள்களான அக்சயா, அக்ஷிதா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா டிசம்பர் 3 அன்று மாலை தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பி.எல்.ஏ மகாலில் நடைபெற்றது.


தஞ்சை கருந்தட்டாங்குடி அஞ்சல் தாமரை நாட்டிய நிருத்யாலயா சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்குத் தாமரை பன்னாட்டுப் பள்ளியின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நிர்மலா வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இவர்களது மகன் ஆகாஷ் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஆசிய கலாச்சாரத்திற்கான பாரத இளங்கோ அமைப்பு நிர்வாக அறங்காவலரும், நிருத்யோதயா தலைவருமான பத்ம பூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் கலந்து கொண்டு இரண்டு சகோதரி களையும், அவர்களின் பரதநாட்டிய திறமைகளையும் வாழ்த்திப்பேசினார். நிகழ்ச்சியின் முதலில் அக்சயா, அக்ஷிதா ஆகியோர் சபை வணக்கம் தெரிவித்தனர். இதையடுத்து புஷ்பாஞ்சலி, கணபதி கௌத்துவம், முருகர் கௌத்துவம், அலாரிப்பு, ஜதிஸ்வரம், தேவி நீயே துணை, பதம், காவடிச்சிந்து, தில்லானா, மங்களம் ஆகியவைப்படி சகோதரிகள் நாட்டியமாடி அரங்கேற்றம் செய்தனர். இதில் நட்டுவாங்கத்தை ஆடற் கலைமணி திருவையாறு தினேஷ் வாசித்தார். இவர்தான் இச்சகோதரி களுக்கு பரதநாட்டியம் பயிற்றுவித்து அவர்களை அரங்கேற்றம் செய்வித்தார்.


முதுகலை இசைக்கலைமணி தஞ்சை மீனா சுவாமிநாதன் பாடல் கள் பாடினார். மிருதங்க உலக சாதனை யாளர் சதிஷ் குமார் மிருதங்கமும், வேய்குழல் வேந்தன் தஞ்சை சரவணன் புல்லாங்குழலும், திருவையாறு சீனிவாசன் வயலினும், குழந்தை பாலாஜி மோர்சிங்கும் வாசித்தனர். தஞ்சை கதிரவன் ஒப்பனை செய்தார். தஞ்சை தாமரை பன்னாட்டுப் பள்ளி ஆசிரியர்கள் பிரபு, விஜி, சிவகாமி ஆகியோர் தொகுத்து வழங்கினார். இந்த பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், அன்பழகன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.காந்தி, திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, வக்கீல் எஸ்.எஸ்.ராஜ்குமார், ரதிமீனா டிராவல்ஸ் உரிமையாளர் சேகர் மற்றும் பாரதநாட்டியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சகோதரிகளை வாழ்த்தினர்.