நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா, தலையில் முடி இல்லாமல் வெளியிட்ட காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவிற்குள் இயக்குனர் பாண்டியராஜன் மூலமாக அறிமுகமாகியவர் தான் சீதா. ஆண்பாவம்” என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
சினிமா மீதுள்ள ஆர்வம் தான் அவரை பட்டிதொட்டியெங்கும் தெரிய செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்திற்கு பின்னர் சீதா பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை. தொடர்ந்து இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது சீதா தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் தனக்கு தேவையான காய்கறிகளை அவரே விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.யூடியூப் சேனலில் கடைசியாக வெளியிட்ட காணொளியில் தலையில் முடி இல்லாமல் மொட்டையாக இருக்கிறார்.இது நீண்ட நாள் வேண்டுதல் என்றும், தற்போது நிறைவேற்றி உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.



Leave a Reply