உலகம் முழுவதும் குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக உலக நாடுகளுக்கு ஐநாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையாக ஆகஸ்டு 14-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கண்காணிக்கும்படி உஷார் படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை தொற்று விமான பயணிகள் மூலம் மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகளை கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் முகாம் தொடங்கப்படுகிறது.
தமிழ் நாடு நாளை முதல் தமிழக விமான நிலையங்களில் `குரங்கம்மை’ பரிசோதனை…..!

Leave a Reply