காவல்துறையுல் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுக்கு லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ஆர்.லலிதா லட்சுமி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை தளவாய் (ராஜபாளையம், 11ம் அணி) சு.ராஜசேகரன், ஈரோடு சிறப்பு இலகுப்படை உதவி ஆய்வாளர் ஆர்.ராயப்பன் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் விருது பட்டியலில் 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு…!

Leave a Reply