தூய்மையான ஆற்றலுக்கு எளிதாக மாறுவதற்காக மாநிலம் முழுவதிலும் 42 சேனல் பார்ட்னர்களின் ஆதரவோடு இந்த முன்னெடுப்பு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.
தங்கள் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு கிரெடிட்களை குடியிருப்பாளர்கள் பெறுவதற்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் மின்சார கட்டணங்கள் முற்றிலுமாக குறைக்கப்படும்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு இந்த முன்னெடுப்பு ஆதரவளிக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகவும் மற்றும் டாடா பவரின் துணை நிறுவனமாகவும் இயங்கி வரும் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட் (TPREL). அதன் பிரபலமான #GharGharSolar, Tata Power ke Sang’ என்ற முன்னெடுப்பு திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுவதன் மூலம் விரிவாக்கம் செய்யப்படுவதை பெருமிதத்துடன் அறிவிக்கிறது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதன் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, இந்த முன்னெடுப்பானது இப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு நிலையான மற்றும் எளிதாக கிடைக்கும் சூரிய ஆற்றலின் மூலம் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தூய்மையான ஆற்றல் தீர்வுகளை தமிழ்நாட்டு மக்கள் பெறுவதற்கு இது உதவுகிறது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்த தொடக்க விழா நிகழ்வில், டாடா பவர் கம்பெனி லிமிடெட்டின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரவீர் சின்ஹா, மற்றும் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட்-இன் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு தீபேஷ் நந்தா மற்றும் மூத்த உயரதிகாரிகள் மற்றும் மதிப்புமிக்க கூட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தூய்மையான ஆற்றலுக்கு எளிதாக மாறுவதற்காக மாநிலம் முழுவதிலும் 42 சேனல் பார்ட்னர்களின் ஆதரவோடு இந்த திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சி கண்டு வரும் சேவை தொகுப்பில் TPREL-க்கு ஒரு மிக முக்கிய பங்காற்றும் அமைவிடமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது. குடியிருப்புகள் வர்த்தக அமைவிடங்கள் மற்றும் தொழிலகங்கள் ஆகிய அனைத்திலும் 240 மெகாவாட்-க்கும் அதிகமான நிறுவு ஆற்றலுடன் இம்மாநிலம் சூரியஒளி மின்சக்தி துறையில் முதன்மை மாநிலமாக உருவெடுக்கவிருக்கிறது. இப்பிராந்தியத்தில் ஒரு முக்கிய செயல்திட்டமாக டாடா பவர் நிறுவனத்தின் 43 GW சோலார் சோலார் செல் மற்றும் சோலார் பேனல் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. உள்நாட்டிலேயே சோலார் செல்கள் மற்றும் சோலார் பேனல்களின் உற்பத்தியை
அதிகரிப்பதன் வழியாக இறக்குமதி மீதான சார்ந்திருப்பை இத்தொழிலகம் குறைக்கிறது. அத்துடன் இந்தியாவின் மாபெரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது. சூரியஒளி மற்றும் காற்றலை மின்சக்தி ஆகிய இரு பிரிவுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மிகப்பெரிய சாத்தியத்திறனை தமிழ்நாடு கொண்டிருக்கிறது தூய்மையான எரிசக்திக்கு ஆதரவளிக்கும் சாதகமான அரசு கொள்கைகள் இதற்கு பலம் சேர்க்கின்றன.
டாடா பவர் கம்பெனி லிமிடெட்டின் தலைமை செயல் அலுவலர் & நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரவீர் சின்ஹா இது குறித்து கூறியதாவது. தமிழ்நாட்டில் எங்களது அதிக வெற்றிகரமான #GharGharSolar முன்னெடுப்பு திட்டத்தின் அறிமுகமானது இல்லங்களில் மேற்கூரைகளில் நிறுவப்படும் சோலார் தீர்வுகளின் வழியாக தூய்மையான மற்றும் வலுவான மின்சக்தி தயாரிக்கப்படுவதிலும், பயன்படுத்தப்படுவதிலும் ஆதரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இம்மாநிலத்திலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் அவைகளின் ஆற்றல் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்வதற்கு இத்திட்டம் அவர்களுக்கு முக்கிய பயன் தரும்; மேற்கூரைகளில் நிறுவப்படும் சோலார் சாதனங்களின் வழியாக தங்களது மின்சார பயன்பாட்டிற்காக செலவிடப்படும் தொகைகளை பெரிதும் குறைக்க முடியும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மக்கள் பரவலாக பயன்படுத்துவகை மாநில அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இந்த முன்னெடுப்பு திட்டத்தின் வழியாக, இந்தியாவில் தூய்மையான ஆற்றலுக்கான தலைமையகமாக தமிழ்நாட்டை உயர்த்துவது என்ற அரசின் சீரிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.”
#GharGharSolar’ பரப்புரை திட்டமானது, அதிநவீன மேற்கூரை சோலார் தீர்வுகளை (RTS) நிதி ரீதியாக எளிதில் பெறக்கூடியதாக மாற்றுவதற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரதான் மந்திரி சூர்ய கர் யோஜனா திட்டத்தின் வழியாக, kW சோலார் சாதனத்திற்கு ₹30,000, 2KWக்கு ₹60,000 மற்றும் 3 முதல் 10kW வரையிலான சோலார் சாதனங்களை நிறுவுவதற்கு ₹78,000 என அரசு வழங்கும் மானியத்தொகை மூலம் குடியிருப்பாளர்கள் பயனடையலாம். அரசு வழங்கும் இந்த ஊக்கத்தொகைகள், சூரிய மின்சக்திக்கு மாறுவதற்கான செலவை வெகுவாகக் குறைக்கின்றன. இதனால் வீட்டு உரிமையாளர்கள் தூய்மையான ஆற்றலான சூரியஒளி மின்சக்தியை தாங்களே தயாரித்து சிறப்பாக பயன்படுத்த முடியும்.
சோலார் சாதனங்களை வீட்டு மேற்கூரைகளில் நிறுவுவதற்காக அரசால் வழங்கப்படும் இந்த மானியத் தொகைகளுக்கும் கூடுதலாக நிகர மின்சக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அளவிடுவதற்கான மீட்டர்களும் (Net Metering) இத்திட்டத்தில் பொருத்தப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் மின்சார உற்பத்திக்கு கிரெடிட்களை பெற்று பயனடையலாம். இந்த கிரெடிட்களை எதிர்கால மின்சார பில்களின் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இதன் மூலம் மாதாந்திர மின்கட்டண செலவுகளை குறைக்கலாம் மற்றும் சோலார் சாதனங்கள் மீது செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து கிடைக்கும் சேமிப்பை அதிகரிக்கலாம்.
சோலார் துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த அனுபவத்தோடு இயங்கி வரும் டாடா பவர், நிலைப்புத்தன்மையுள்ள தூய்மை எரிசக்தி இயக்கத்தில் முன்னணியில் உள்ளது. சோலார் மேற்கூரை சாதனங்களை வாங்கும் நுகர்வோர்களுக்கு சோலார் பேனல்கள் மீது 25 ஆண்டுகள் வாரண்ட்டி, நம்பகமான தர உத்தரவாதம், ஆயுட்காலம் முழுவதும் சேவை, இந்தியாவெங்கும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு, எளிதான நிதியளிப்பு விருப்பங்கள் மற்றும் இச்சாதனங்களுக்கான
காப்பீடு ஆகியவை உட்பட அதிகபட்ச ஆதாயங்களின் தொகுப்பை இந்நிறுவனம் வழங்குகிறது. 500க்கும் அதிகமான சேனல் பார்ட்னர்களின் தனது விரிவான வலையமைப்பின் வழியாக சோலார் மேற்கூரை செயல்திட்டத்தை இந்நிறுவனம் தீவிரமாக ஊக்குவிக்கும் நாட்டின் மூலைமுடுக்கு அனைத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும். இந்தியாவெங்கிலும் 2.5GW-க்கும் அதிகமாக மேற்கூரைகளில் சோலார் சாதனங்களை நிறுவியிருக்கும் TPREL 1,00,000- க்கும் அதிகமான எண்ணிக்கையில் முழுதிருப்தி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு இதுவரை சேவை வழங்கியிருக்கிறது.
டாடா பவரில் சோலார் மேற்கூரை சாதனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்:
எளிதான நிதியுதவி: கவர்ச்சிகரமான நிதிச் சலுகைகளுடன் பல்வேறு பட்ஜெட்டுகளுக்கு ஏற்ற நெகிழ்வான பணம் செலுத்தல் திட்டங்கள்
மேம்பட்ட தொழில்நுட்பம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உகந்த செயல்திறன் மற்றும் இரண்டு பக்கங்களிலும் மின்சாரத்தை தயாரிக்கும் திறனுள்ள சோலார் பேனல்கள் அதிவிரைவான செயல்பாடு: விசாரணை முதல் நிறுவல் வரை விரைவான செயல்முறை
அனைத்து உபகரணங்களுக்கும் ஐந்து ஆண்டுகள் உத்தரவாதம்
மேற்கூரை சோலார் சாதனத்திற்கு (RTS) விண்ணப்பிப்பது எப்படி
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் 1800 25 77777 என்ற எண்ணில் எங்கள் ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு #GharGharSolar என்ற திட்டத்தின் கீழ் வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் சாதனம் நிறுவுவது பற்றி மேலும் அறியலாம்.
Leave a Reply