தமிழக பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மலையற்ற திட்டத்தினை தொடக்கி வைத்துள்ளார். அதில் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையும் சேர்க்கப்பட்டுள்ளது.
சிவன் உறையும் மலை உங்களுக்கு சுற்றுலா செல்வதற்கான இடமா? இயற்கை ஆர்வலர்கள் இங்கு தான் மலை ஏற்ற வேண்டுமா? இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக விளங்கி வரும் வெள்ளியங்கிரி மலை மீது, கடவுள் நம்பிக்கை அற்றவர்களும், பிற மதத்தவர்களும் இத்திட்டத்தின் பெயரைச் சொல்லி வருவார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இந்தப் புண்ணிய மலை ஏற அரசுக்கு வெறும் ₹5353.95 கட்டணம். தெற்கில் உதித்த கைலாயமாக, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதபடுகிறது வெள்ளியங்கிரி மலை, ஆண்டுதோறும் விரதமிருந்து பல லட்சம் மக்கள் பக்தி சிரத்தையுடன் மத யாத்திரையாக எந்த கட்டணமும் இல்லாமல் செல்வது வழக்கம்.
கடும் மழை, யானை நடமாட்டம் காரணமாக தை மாதம் முதல் வைகாசி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி. ஆபத்தான மலை பாதையை மேம்படுத்த இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத திராவிட மாடல் அரசு அதிரடியாக இப்பொது கொள்ளை கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுவரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபட்டு வந்தனர், சபரிமலையை போலவே இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை, அப்படிபட்ட பாதையை விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது
தமிழக அரசு. மலையேற்ற திட்டத்திலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு விலக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக மற்றும் சிவனடியார்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடைபெறும் என கூறியுள்ளார்.
Leave a Reply