நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 2 லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாயவுகள் நடைபெற்றுள்ளன. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 28) காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை: நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்….

Leave a Reply