தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு தமிழக அரசு ரூ. 2000 அபராதம் விதித்து வருகிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு முன்பு அபராதம் 50 ரூபாய் என இருந்த நிலையில் இப்போது ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply