தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்து, கோவையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதோடு, மின் கட்டணத்திலும் அதிகரிப்பு செய்தது. இதன் எதிரொலாக, பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றி கழகம் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் படி, கோவை மாவட்ட தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் கருப்பு உடை அணிந்து, கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழ்நாடு அரசு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, தமிழக வெற்றி கழக (தவெக) பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது, “விஜய் வாழ்க – தவெக வாழ்க” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Leave a Reply