, , ,

தமிழக விவசாயிகள் மேல் தனிக்கவனம் செலுத்த வேண்டும்…பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K நாகராஜ் கோரிக்கை.

agriculture
Spread the love

தமிழக விவசாயிகள் மேல் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சரிடம் பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K நாகராஜ் அவர்கள் கோரிக்கை.

சென்னை விமானநிலையத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சௌகான் அவர்களை சந்தித்து, தமிழ்நாடு விவசாயிகளின் நிலைமையை குறித்து விளக்கம் அளித்த பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் அவர்கள் தமிழகத்தில் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ஓட்டு வங்கி அரசியல் மீது கவனம் செலுத்தும் திமுக அரசு, தமிழக விவசாயிகள் மீது எவ்வித அக்கறையும் காட்ட வில்லை. ரூ.2000 கோடியில் துவக்கப்பட்ட அவினாசி-அத்திக்கடவு திட்டம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை இதனால் 1500 குளம்,குட்டைகள் காய்ந்து கிடக்கின்றன,நீராதாரம் குறித்து தமிழக அரசு எவ்விதம் அக்கறையும் காட்டவில்லை.
முல்லைப்பெரியாறாகட்டும்,காவிரி பிரச்சனையாகட்டும் ஆனைமலை-நல்லாறு திட்டம் என எவ்வித நீண்டகால திட்டங்களிலும் தமிழக விவசாயிகள் மீது அக்கறை கொண்டு திமுக அரசு செயல்படவில்லை.அதேபோல தமிழ்நாட்டில் அதிக அளவில் உற்பத்தியாகும் தேங்காயின் விலை, விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்காகியுள்ளது. மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை வழங்கியும் அது உண்மையான விவசாயிகளை சென்று சேரவில்லை.தற்போது தேங்காய் விலை ஒன்பது ரூபாய் அதை போடுவதற்கு கூலி இரண்டு ரூபாய்.எனவே மத்திய அரசு தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதுபோன்று கனிமவள கொள்ளை, விவசாயிகளின் திட்டங்களான கிசான் சம்மன் நிதி,கிசான் கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாநில அரசின் மெத்தனத்தால் விவசாயிகளை சென்று சேரவில்லை. எனவே மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.சிவராஜ் சிங் செளகான் அவர்கள் ஒரு நாள் முழுவதும் தமிழகத்திலிருந்து தமிழக விவசாயிகளை,விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து மத்திய,மாநில வேளாண்துறை அதிகாரிகளோடு இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் கூடிய விரைவில் அதிகாரிகளோடு தமிழகம் வருவதாகவும் விவசாயிகளையும்,விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் அவர்களோடு தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன்,மாநில பொதுச்செயலாளர் திரு.ரவிச்சந்திரன்,மாநில துணைத் தலைவர்கள் திரு.முத்துராமன்,திரு.S.G.ரமேஷ்,மாநில செயலாளர் திரு.SNM.ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.