தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, எழும்பூா்-திருநெல்வேலி, கோவை-பெங்களூரு என மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில்களை பிரதமா் மோடி டெல்லியில் இருந்து இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவர்னர் ஆா்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோா் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்கள்…!- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ….

Leave a Reply