தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.03% மாணவர்கள் தேர்ச்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

plus two results
Spread the love

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. மாணவர்களிடையே நீண்ட நாட்களாக நிலவிய எதிர்பார்ப்புக்கு இறுதியாக புள்ளிவிவரங்களுடன் முடிவுகள் வெளியானது. இந்தாண்டு, தேர்வெழுதிய 8,21,257 மாணவர்களில் 95.03 சதவீதம் பேர் வெற்றிகொண்டுள்ளனர்.

மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 25ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இத்தேர்வில் 3,78,545 மாணவர்களும், 4,24,223 மாணவிகளும், 18,344 தனித்தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் சேர்ந்து மொத்தம் 8,21,257 பேர் பங்கேற்றனர்.

தேர்வுக்குப் பிந்தைய விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதையடுத்து, மதிப்பெண்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இன்றைய முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in மற்றும் https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பார்வையிடலாம்.

மேலும், தேர்வு முடிவுகள் மாணவர்கள் சமர்ப்பித்திருந்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகள் மூலமாகவும் மாணவர்கள் தேர்ச்சி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.