,

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

global investors meet
Spread the love

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய 2 நாட்களில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளையை நினைவு பரிசாக வழங்கினார்.  அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளது. மேலும் தமிழகத்தின் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

மேலும் இதில் உலக நாடுகள் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய திட்டமிட்டு அறிவித்துள்ளது. குறிப்பாக ஹூண்டாய், ஓலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அறிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.