தந்தையிடம் மன்னிபு கேட்பது ஒன்றும் பெரிதல்ல – அன்புமணி உருக்கம்

Spread the love

என் மீது ஏதாவது கோபம் இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.. தந்தையிடம் மன்னிப்பு கேட்பது பெரிதல்ல என தந்தை ராமதாஸிடம் பாமக நிறுவனர் அன்புமணி மன்னிப்புக்கோரியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி, மாறி நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவில் நிகழும் மாற்றங்களும், மோதல்களும் அதிகரித்து கொன்டே தான் வருகிறது.

ஒங்காக செயல்படாத மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார். அதன்படி இதுவரை 60-க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருவள்ளூர் மணவாள நகரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸால் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் பாலு, திலகபாமா, மாநில – மாவட்ட மற்றும் ஒன்றிய பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்க்தில் பேசிய அன்புமணி, “திருவள்ளூரில் முப்போகம் விளையும் 1,200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரைவார்க்க திமுக அரசு துடிக்கிறது. ஏன் அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு தரிசு நிலம் அதிகம் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தை திமுக அரசு ஒதுக்கலாமே? திமுக ஆட்சி முடிவுக்கான கவுண்டவுன் இன்று முதல் தொடங்கிவிட்டது.

சமூகநீதிக்காக பாமகவை தொடங்கிய ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். சமூக நீதி பற்றி பேச முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. சமூகநீதியின் துரோகி திமுக. கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டனிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக.

மருத்துவர் ஐயா ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். என் மீது ஏதாவது கோபம் இருந்தால் ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தந்தையிடம் மன்னிபு கேட்பது ஒன்றும் பெரிதல்ல. ராமதாஸ் ஐயா நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தேசிய தலைவர்; நாட்டின் மூத்த அரசியல் தலைவர் ஐயா ராமதாஸ். ஐயா டென்ஷன் ஆக வேண்டாம். வருத்தப்படாதீர்கள். நீங்கள் உருவாக்கிய கட்சி இது; நீங்கள் கோபப்படக்கூடாது . கடினமான காலங்களை கடந்து வந்தவர் நீங்கள். பல தியாகங்களை செய்தவர் ஐயா ராமதாஸ். என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்; மகனாக, பாமக தலைவனாக நான் செய்கிறேன்.” என்று கூறினார்.