, ,

தண்ணீரில் ஊற வச்சால் சாதமாகும் மாய அரிசி… பாலக்காட்டில் விளைகிறது

magic rice
Spread the love

அஸ்ஸாமின் மேற்கு பகுதியில் அகோபிபோரா  என்கிற அரிசி ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த அரிசியை சோறாக்க வெந்நீர் தேவைப்படாது. குளிர்ந்த நீரில் ஊற வைத்தாலே, 30 நிமிடங்களில் சோறாக மாறி விடும். தற்போது, இந்த ரக அரிசியை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலும் பரிச்சாத்திய முறையில் பயிரிடப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த மாவட்டத்தில் மட்டும் அகோனிபோரா ரக அரிசியை பயிரிட வைக்கும் காலநிலை காணப்படுகிறது. பாலக்காட்டிலுள்ள  அதாச்சி குழுமம் தங்களுக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தில் இந்த ரக அரிசியை பரிச்சாத்திய முறையில் பயிரிட்டது. கிட்டத்தட்ட 110 நாள்களில் இந்த நெல் அறுவடை செய்யப்பட்டது. 12 சென்ட் நிலத்தில் இருந்து 170 கிலோ அரிசி கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *