டிசம்பர் 10 அன்று அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

Spread the love

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10 அன்று நடைபெற உள்ளது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) செயற்குழுவும், பொதுக்குழுவும் வரும் டிசம்பர் 10, 2025 அன்று நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிசம்பர் 10 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன் படி இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாகவும், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்கள் அனைவரும் அனுப்பப்படும் அழைப்பிதழ்களுடன் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.