டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் தொடரும் அமலாக்கத்துறை

Spread the love

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மே 17) இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள விசாகனின் வீட்டில் நேற்று (மே 16) முதல் சோதனை தொடங்கப்பட்டது.

சோதனைக்கிடையே விசாகன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதுடன், பின்னர் இரவு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், இன்று காலை முதல் விசாகனின் இல்லத்தில் மீண்டும் சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாகனை மீண்டும் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

அதேபோன்று, சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டிலும் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இந்த சோதனையும் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது.