,

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடையை திறப்போம் – அண்ணாமலை பேச்சு

annamalai
Spread the love

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, “பிரதமருக்கு பிடித்த பழங்குடி மக்கள் இருக்கும் ஆனைகட்டியில் இருக்கிறோம்.மத்திய அரசின் திட்டங்கள் அதிகம் வந்து சேரும் இடம்.வளர்ச்சி அனைத்து பகுதிகளுக்கும் வர வேண்டும்.மலைப் பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை மோடி மட்டும் தான் வைத்துள்ளார்.இங்கு பள்ளிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.மோடி வீடுகள், பைப் குடிநீர், எரிவாயு சிலிண்டர்  மலை வாழ் மக்களுக்கும் வந்து சேர வேண்டும்.

செங்கல் சூலை விவகாரத்தில் திமுக குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டி விடுவார்கள்.இவர்களே பிரச்சனை ஆரம்பித்து வேறு ஒருவர் மீது பழி போடுகிறார்கள்.மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் இயற்கையோடு ஒன்றி இருக்கும் பகுதி.ஆனைகட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.இங்குள்ள மரங்கள் எல்லாம் ஒரு வைரத்துக்கு சமம்.அதே சமயம் வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதி குடி பழங்குடி தான்.மோடி தான் பழங்குடியை சேர்ந்த பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கினர்.மலை வாழ், பழங்குடி மக்களுக்கு பாதுகாவலன் மோடி தான்.

டாஸ்மாக்கை இங்கிருந்து எடுக்க வேண்டும். குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என நம் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் குடிக்க உரிமை இல்லையா நானும் தான் குடிப்பேன் என என்பார்கள். நான் கூறுவது எல்லாம் டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடையை திறப்போம். அதனால் தான் கள்ளுக்கடைகளை திறந்து டாஸ்மாக்கை மூடுவோம் என்கிறோம்” என்று பேசினார்.