தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் டாக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது செயலாளர் ஜி.பிரதாப் சேகர் சங்க செயல்பாடு குறித்து பேசினார் கௌரவ ஆலோசகர் ஏ.சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மின்சார வாரியம் மாதாந்திர வாடகையான நிலை கட்டணத்தை 460 சதமாக உயர்த்தி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் குறு சிறு தொழில்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து தொழில்துறையினர் நிலை கட்டணத்தை குறைக்க கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கிறோம் உடனடியாக கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Leave a Reply