டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் “நமக்கு வேண்டாம்” போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

Spread the love

டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் யங் இந்தியன்ஸ், யங் இந்தியன் ஹெல்த் மற்றும் யுவா கிளப் இணைந்து நடத்தும் “நமக்கு வேண்டாம்” என்னும் தலைப்பில் போதைப் பொருள் இல்லா கோவையை உருவாக்கிட அதற்கான விழிப்புணர்வு நிகழ்வு என். ஜி. பி. கலையரங்கில் நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவராலும் குத்து விளக்கேற்றப்பட்டு இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. சரவணன் வரவேற்புரை வழங்கினார். டாக்டர் என். ஜி. பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி, டாக்டர் என். ஜி. பி. கல்விக் குழுமங்களின் அறங்காவலர் அருண் என் பழனிசாமி, டாக்டர் என். ஜி. பி. கல்விக் குழுமங்களின் இயக்குனர் மதுரா அருண் பழனிசாமி, டாக்டர் என். ஜி. பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ. டி. புவனேஸ்வரன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். டாக்டர் என். ஜி. பி. கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.
யங் இந்தியாவின் உறுப்பினர் சிவசங்கர் மற்றும் சஞ்சீவ் பத்ரி, சங்கர் ஐ. ஏ. எஸ். அகடெமியின் நிறுவனர் ஆர். எஸ். அருண் கல்லூரியில் மாணவர்கள் சார்பாக இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் சஞ்சய் கிறிஸ்டோபர் மற்றும் இளங்கலை மூன்றாமாண்டு மாணவி எஸ். ஆர். திவ்யா இருவரும் போதைப் பொருளின் தீமை குறித்து உரையாற்றினர். கல்லூரியில் இளங்கலை மாணவர் தரனேஷ் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியையும் நன்றியுரையையும் வழங்கினார்.