,

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையன் மனைவிக்கு பங்குண்டு – காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

jos alukkas
Spread the love

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் விஜய் என கண்டறியப்பட்டுள்ளது. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.. விஜயின் மனைவி நர்மதா இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது மனைவிக்கு இதில் பெரும் பங்கு உண்டு என தெரிவித்தார்.

விஜயின் மனைவியிடம் இருந்து மூன்று கிலோ நகை மீட்கப்பட்டுள்ளது..விஜயை கைது செய்தால் மீதமுள்ள நகைகளும் மீட்கப்படும்.  விஜயின் மீது அரூர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகள்  கோவை ஆர் எஸ் புரத்தில் ஒரு திருட்டு வழக்கு என மூன்று வழக்குகள்  உள்ளது.  இந்த கொள்ளை சம்பத்துவிற்கு முழுக்க முழுக்க அவர் மனைவி நர்மதா காரணம். விஜய் மனைவி நர்மதா மீது எந்தவிதமான வழக்கும் தற்போது வரை இல்லை எனவும் இந்த வழக்கில் விஜய் நண்பர் சுரேஷ் மேற்கொண்டு வருவதாக கூறினார்.  துணை ஆணையாளர்கள் சந்தீஷ், சண்முகம் ஆகியோர் தலைமையில் ஐந்து தனிப்படையில் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று  பேசினார்