ஜேஇஇ மெயின் 2025 – 2வது அமர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு

Spread the love

தேசியத் தேர்வு முகமை, ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறும் ஜேஇஇ மெயின் 2025 – 2வது அமர்வுக்கான அட்மிட் கார்டுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்கள் நுழைவுச் சீட்டுகளை (Admit Card) பதிவிறக்கம் செய்யலாம்.

ஜேஇஇ மெயின் 2025 – 2வது அமர்வு ஏப்ரல் 2, 3, 4, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மற்றும் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை என இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படும். இருப்பினும், ஏப்ரல் 8ஆம் தேதி தேர்வு மாலை நேரத்தில் மட்டுமே நடைபெறும்.

ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 28, 2025 முதல் தங்கள் அட்மிட் கார்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் தகவல்களை கவனமாக படித்து, அவற்றின்படி செயல்படுவது முக்கியம்.

மேலும், ஏப்ரல் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான அட்மிட் கார்டுகள் விரைவில் வெளியிடப்படும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஜேஇஇ மெயின் 2025 தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, தேர்வர்கள் jeemain.nta.nic.in இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடலாம்.

‘ஏப்ரல் 2, 3 மற்றும் 4, 2025 அன்று தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 28, 2025 முதல் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in இலிருந்து ஜேஇஇ மெயின்ஸ் 2025 அமர்வு 2 இன் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உள்ள வழிமுறைகளையும் தகவல்களையும் படிக்க வேண்டும். ஏப்ரல் 7, 8 மற்றும் 9, 2025 ஆகிய தேதிகளில் நடக்கும் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.’ என தேசியத் தேர்வு முகமையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.