ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்

Spread the love

கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்து வமனை சார்பில், இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், “ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் 3-ம் பதிப்பு நடத்தப்பட்டது.
செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த இயலும்.இதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
எனவே தான், பொதுமக்கள் அனைவரும் குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக, கோவை, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான், நடைபெற்றது. மாரத்தான் கோயம்புத்தூர் மாவட்ட தடகள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாரத்தானை எல் எம் டபிள்யு, லக்ஷ்மி மில்ஸ், லக்ஷ்மி கார்ட் குளோத்திங்க் ஆகிய நிறுவனங்களும் இணைத்து நடத்தின.
கோவை போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையாளர் கோகுல கிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி மற்றும் பிற முக்கிய பிறமுகர்களுடன் இணைந்து கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.
மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெற்றது. எல்லா வயதினருக்கும். 1& 3 கி.மீ. இதில் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்றாக ஓடினர். 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் 5 கிமீ ஓட்டம் நடைபெற்றது. மேலும் 10 கி.மீ. இதில் 18 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஒரு பிரிவாக இதில் கலந்து கொண்டனர். 5 மற்றும் 10 கிமீ பிரிவுகளில் வெற்றி வெற்றவர்களுக்கு, ரொக்க பரிசு தொகை ரூ.75,000 வழங்கப்பட்டது.
2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குண மடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசுவாமி கூறியதாவது: ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் – 2024 இன் இரண்டாவது பதிப்பில், 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகள், இந்த மரத்தானில் கிடைத்த நிதி மூலம் பயனடைந்தனர்.
கடந்த இரண்டு பதிப்புகளில் போலவே இம்முறையும், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகள், இந்த மரத்தானில் கலந்து கொண்டனர். கே.என்.சி அறக்கட்டளையின் ஒரு பிரிவான ஜி.கே.என்.எம். மருத்துவமனை, கோவையில்் குழந்தைகளுக்கான இருதய பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சையில் முன்னோடியாக உள்ளது.இந்த இரண்டு மருத்துவ பிரிவுகளுமே, நவீன தொழிநுட்பங்களுடனும், உலகத்தரமான மருத்துவக் கருவிகளுடனும் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.