,

சொத்து வரி உயர்வை எதிர்த்து கோவையில் மனித சங்கிலி- முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அழைப்பு….

sp velumani
Spread the love

கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில் வரி உயர்வை உயர்த்திவிட்டனர் கூடுதலாக 6% வரியை உயர்த்தி விட்டனர் அதனை செலுத்த தவறினால் ஒரு சதவிகிதம் வட்டி போடுவது என்ற மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது என்றார். கொரோனாவுக்கு பிறகு தொழிலாளர்கள் அனைவரும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்த அவர் வேலை வாய்ப்பினை மின் கட்டண உயர்வு போன்றவற்றால் சிரமப்படுவதாகவும் எனவே இவற்றையெல்லாம் கண்டித்து தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தான் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்துவதாகவும் அறிக்கை வாயிலாக கண்டனத்தை பதிவு செய்வதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் வருகின்ற எட்டாம் தேதி மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை அதிமுக சார்பில் நடத்த இருப்பதாகவும் அதனை எப்படி சிறப்பான முறையில் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். விலை உயர்வை நிறுத்துகின்ற வகையில் இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் இருக்கும் எனவும் தெரிவித்தார். பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், ஓ.கே.சின்னராஜ், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.