, , , ,

சொத்து குவிப்பு வழக்கு: விடுதலையை ரத்து செய்தது ஐகோர்ட்……!

Judgement
Spread the love

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்வதாகக் கூறி , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.  கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில்   நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கினார்.   சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுவின் மனைவி  ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.   மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட அவர், விசாரணைக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இந்த வழக்கில் தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளார்.