சைவம்னா இப்படி, வைணவம்னா அப்படி… பொன்முடி ஆபாச பேச்சு கட்சி பதவி பறிப்பு

K_Ponmudi
Spread the love

வனத்துறை அமைச்சர் பொன்முடி அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கை. அந்த வகையில், பொன்முடி சமீபத்தில் விலை மாது வீட்டுக்கு சென்ற வாடிக்கையாளரிடத்தில் சவிலை மாது நீங்க சைவமா வைணவாமா? என்று கேட்கிறார். அப்படி ஏன் கேட்கிறீர்கள் என்று வாடிக்கையாளர் கேட்ட போது, ஒன்றுமில்லை சைவம்னா இப்படி, வைணம்னா அப்படினு அச்சில் ஏற்றாத முறையில் ஆபாசமாக பேசினார். பொன்முடியின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பி கனி மொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பொன்முடியின் திமுக துணைச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்குவது முதன்முறையல்ல. இதற்கு, முன்பும் பல முறை மோசமான முறையில் பேசியிருக்கிறார்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை, “ஏம்மா நீ எஸ்.சி.தானே…” என்று மேடையிலேயே கேட்டார் என சர்ச்சை வெடித்தது.
அதாவது அந்த சமூகத்தினரும் ஊராட்சித் தலைவர் ஆகும் அளவுக்கு ‘திராவிட கொள்கைகள் வழிவகுத்தன’ என்ற அர்த்தத்தில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இருப்பினும் அவர் “ஏம்மா நீ எஸ்.சி.தானே…” என்று பேசி இருக்கக்கூடாது என எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
அடுத்து, இப்போது பெண்கள் எல்லாம் எப்படி பயணம் செய்கிறீர்கள். கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்” என்று பேசியதாக வீடியோ வெளியானது.இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களுக்கான சலுகைகளை நீங்கள் அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் தருகிறீர்கள், பெருத்து வழியும் கோபாலபுரத்து கஜானாவிலிருந்தல்ல! கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வக்கில்லாமல் நம்பி வாக்களித்த பாமர மக்களை துச்சமாக மதித்து ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது” என அறிக்கை விடுத்திருந்தார்.
அதோடு, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பொன்முடி, கள்ளை போதைப்பொருள் என கூறியதைக் கண்டித்து, விழுப்புரத்தில் பெண்கள் கள் குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் தரப்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.