,

சேலத்தில் துவங்கியது திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு

திமுக இளைஞரணி மாநில மாநாடு
Spread the love

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தொடங்கியது.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியேற்றி வைத்தார். மாநில உரிமைகள் பறிப்பு, நீட் விலக்கு உள்ளிட்ட 22 தலைப்புகளில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றவுள்ளனர். மாநாட்டின் நிறைவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்பு உரையாற்ற உள்ளனர். திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி சேலத்தில்  8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.