செயற்கை நுண்ணறிவு இன்று பெரும் தொழில்துறைகள் மட்டுமின்றி, விவசாயத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்ற விவசாய நாடுகளில் சிறு விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். காலநிலை மாற்றம், மண்வளம் குறைபாடு, பூச்சிகள் தாக்குதல் போன்ற பிரச்சனைகள் அவர்களின் உழைப்பை பெரிதும் பாதிக்கின்றன. இந்த சவால்களுக்கு தீர்வாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படுகிறது. இது விவசாயிகளுக்கு புத்திசாலித்தனமான தீர்வுகளை வழங்குவதோடு, அவர்களது வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு பயிர்களின் வளர்ச்சியை கண்காணிக்க, மண் தரத்தை பரிசோதிக்க, காலநிலை முன்னறிவிப்புகளை வழங்க, பூச்சிகளை அடையாளம் காண போன்ற பல பயனுள்ள செயல்களைச் செய்ய உதவுகிறது. இதன் மூலம் விவசாயிகள் துல்லியமான முடிவுகளை எடுத்து அதிக லாபம் ஈட்ட முடியும்.
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு ட்ரோன்கள் மற்றும் சென்சார்கள் பயன்படுத்தி வயல்களை நேரடியாக கண்காணிக்கலாம். இதன் மூலம் பயிர்களின் ஆரோக்கியம் பற்றிய மதிப்பு மிக்க தகவல்களை பெறலாம். எந்த நேரத்தில் தண்ணீர் தேவை, எப்போது உரம் சேர்க்க வேண்டும், பூச்சிக்கொல்லிகளை எப்போது பயன்படுத்த வேண்டும், ஆகிய அனைத்தையும் சரியாக நிர்ணயிக்க முடியும். இதனால் பயிர்களின் வளர்ச்சி மேம்பட்டு, விளைச்சல் அதிகரிக்க வழிவகுக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள் துல்லியமான வானிலை தகவல்களை பெறலாம். இதன் மூலம் சரியான நேரத்தில் விதை விதைப்பது, அறுவடை செய்வது உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளை திட்டமிட்டுச் செய்ய முடியும். எதிர்பாராத வானிலை மாற்றங்கள், புயல், கனமழை போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் சேதமடையாமல் இருக்கவும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவும்.
விவசாயத்தில் மண் தரம் முக்கியம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஆய்வு செய்து அதில் உள்ள குறைபாடுகளை கண்டறிய உதவுகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள் எந்த பயிர்களைப் பயிரிடலாம், எந்த உரங்களை பயன்படுத்தலாம் என்பது பற்றிய தெளிவான தகவல்களைப் பெற முடியும். இதனால் மண்ணின் தரம் மேம்பட்டு விளைச்சல் அதிகரிக்கும்.
பயிர்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை அடையாளம் காண, அதன் தாக்கத்தை தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொபைல் அப்ளிகேஷன்கள் பயன்படுகின்றன. இதனால் பூச்சிகள் பரவுவதற்கு முன்பே அதனை கட்டுப்படுத்தி, பயிர்களை பாதுகாக்க முடியும். இது விவசாயிகளின் நஷ்டத்தை குறைத்து அவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விவசாயத்தை மேலும் சீரமைத்து, விளைச்சலை அதிகரிக்கின்றது. குறைந்த செலவில் அதிக உற்பத்தி செய்யவும், வளங்களை வீணாக்காமல் பயன்படுத்தவும் இதன் மூலம் சாதியம். சிறு விவசாயிகளுக்கு கூட செயற்கை நுண்ணறிவு பெரிய வரப்பிரசாதமாக மாறி, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கூட மேம்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த தொழில்நுட்பமாக விளங்குகிறது.
Leave a Reply