வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 230 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் மிக்ஜம் புயல் வேகமெடுத்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தீவிர புயலாகக் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply