சென்னையில் மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது .
கோவையில் இருந்து ரூ 6 லட்சம் மதிப்புள்ள உணவு , உடை, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஒரு லாரி மூலம் அனுப்பப்பட்டது. இதை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை ஆணையாளர்கள் சண்முகம், சந்தீஷ், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் ஆனந்த், ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
Leave a Reply