சூலூரில் இந்து எழுச்சி பொதுக்கூட்டம் – 14 கோரிக்கைகள் வைக்கப்பட்டது

Spread the love

கோவை மாவட்டம் சூலூரில் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக, நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் ஒரு இந்து எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டு முக்கியமான அரசியல் மற்றும் சமூக விடயங்களை குறித்து சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தின் போது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 14 முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன

கோவை மாவட்டம் சூலூரில் 22/06/2025 அன்று இந்து இயக்கங்கள் சார்பாக நடைபெற்ற இந்து எழுச்சி பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்
1. கோவை மாநகரில் விரைவாக தேசிய புலனாய்வு காவல் நிலையம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
2. தமிழகத்தில் பசுவதை தடைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
3. தமிழக முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலையை உடனடியாக நிறுவ வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
4. சூலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் தங்கி உள்ள வெளி மாநிலத்தினர் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
5. சூலூர் பகுதியில் புதிதாக தனியார் எஃப் எல் டு மதுபான கடைகளுக்கும், அரசு மதுபான கடைகளுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசே வலியுறுத்துகிறோம்.
6. கோவை மாவட்டத்தில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (SIC) பிரிவை தொடங்கி அதில் காவல் துறையினரை பணி நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
7. கோவை திருப்பூர் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்காளதேசத்தினசை மற்றும் அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
8. தலைமை செயலகத்தின் பெயர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்கின்ற பெயரை மாற்றி தமிழ்த்தாய் மாளிகை என்று பெயர் வைக்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
9. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் விசேஷ நாட்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
10.தமிழகத்தில் மதமாற்று தடைச் சட்டத்தையும், மற்றும் பொது சிவில் சட்டத்தையும் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
11.இட ஒதுக்கீடு என்ற பெயரில் சாதி ரீதியான அமைப்புகளுக்கு வழங்குவதை மாற்றி பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
12.தமிழகத்தில் திரைப்படங்களிலும் சின்னத்திரைகளிலும் ஊடகங்களில் இந்து சமயந்தையோ இந்து கடவுள்களையோ இழிவாக பேசுபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.13.தமிழகத்தில் நேர்மையாக பணியாற்றும் காவல்துறையினரை பணி மாறுதல் செய்வது போன்ற அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறையினரை பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.