,

சுவையான உணவு தந்தவரின் சுவையான பேச்சு – மிரட்டப்பட்டாரா அன்னபூர்ணா சீனிவாசன்?

nirmala sitharaman
Spread the love

கா.சு.வேலாயுதம்

சுவையான உணவு சமைத்துத் தருபவர் அதே சுவையோடு பேசினால் என்ன ஆகும்? கோவையின் பிரபல ஓட்டல் உரிமையாளர் அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு சுவையாகப் பேசினாலும் பேசினார். அது வலைத்தளங்களில் வைரலாகி ராகுல், கனிமொழி, அண்ணாமலை என அரசியல் தலைவர்கள் எல்லாம் எகிறி அடிக்கும் அளவு வியாபித்துள்ளது. இதற்கு முத்தாய்ப்பை அமைந்த மூல சம்பவம் இதுதான்.
கோவை மண்டலத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் ஜி.எஸ்.டி மற்றும் தொழில் சிக்கல்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதனன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார். அதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் பேசி அமர்ந்தார். பிறகு தொழில்துறையினர் கருத்துக்கள் கூறினர்.
அன்னபூர்ணா சீனிவாசன்
அவர்களில் ஒருவராகப் பேசின அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன், ‘‘மேடம் பன்னுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. ஆனால், அதில் க்ரீம் வைத்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வருது. அதனால் வாடிக்கையாளர்கள் பன்னையும், கிரீமையும் கொண்டு வாங்க, நாங்களே வச்சுக்கிறோம்னு சொல்றாங்க. ஒவ்வொரு பொருளுக்கும் வித்தியாசம் வித்தியாசமாக ஜி.எஸ்.டி., போடுவது பிரச்னையாக இருக்கிறது.!’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னவர்,
‘‘பாருங்க உங்க பக்கத்துல இருக்கிற வானதி சீனிவாசன். எங்க ஊர் எம்.எல்.ஏ. எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர். அவங்க ஜிலேபி ஸ்வீட் சாப்பிடும்போது, அதுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., அப்புறம் காபி குடிக்கும் முன் காரம் சாப்பிடும்போது, காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி என இருமாதிரியான ஜிஎஸ்டி போட வேண்டி இருக்கிறது. அதற்காக அவங்க சண்டைக்கு வராங்க. இது தினமும் நடக்கிறது. வடமாநிலத்தில் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும், காரத்திற்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் விதிக்கப்படுவதாக எங்க தொகுதி எம்.எல்.ஏ.,சொல்றாங்க!’’ என்று கூற அரங்கத்தில் சிரிப்பலையும், கைதட்டலும் எழ, னிவாசன் தொடர்ந்து உற்சாக மூடில் பேசினார்.
‘‘இந்த ஜிஎஸ்டி கணக்கைப் போட எங்க கம்யூட்டரே திணறுது மேடம்! ஒரே பில்லில் ஒரே குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி ஜி.எஸ்.டி., போட்டுக்கொடுப்பது கஷ்டமாக இருக்கு. இப்படி பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. தயவு செய்து இதை பரிசீலியுங்கள் மேடம். எங்களால கடையே நடத்த முடியலைங்க . அதிகமோ, கம்மியோ எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ஜி.எஸ்.டி.,யை உயர்த்தினால் பரவாயில்லை. ஒரே மாதிரியா பண்ணுங்க!’’ என்றார்.
இடையில் குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன்,‘‘மாநில வாரியாக எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு இல்லைங்க…” என்றார். என்றாலும் னிவாசன் விடவில்லை.
“அதே கிச்சன், அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது, அதே இடத்தில் ஜி.எஸ்.டி இன்புட் கிரெடிட் எடுக்கும் பொழுது அதிகாரிகளே திணறுகிறார்கள். அவர்களுக்கும் உதவி பண்ணுங்க. ”திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மாதிரி ஏதேனும் நிகழ்வு வரும் போது, வருஷத்துல ஏதாவது ஒரு நாள் தான் ஹோட்டல்களில் ஒரு அறைக்கு 7,500 என பில் போடுகிறோம். கூடுதல் பெட் கொடுத்தால் ரூ.1,000 சேர்த்து பில் பண்ணுவோம். அதுவும் தற்போது ஹோட்டல்களின் அறை கட்டணங்களை மேக் மை ட்ரிப் தான் நிர்ணயிக்கிறது. ஒரு நாள் 7,500 பில் போட்டதற்கு ஆண்டு முழுவதும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., போடுகிறார்கள். இதனை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும்” என்று அடுத்த வெடி வெடித்தார்.
கோயமுத்தூர் மொழி, நாசூக்கான பேச்சு, தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் அவர் வைத்த கோரிக்கையைக் கேட்டு அரங்கில் உள்ளவர்கள் அத்தனை பேரும் ஆரவாரித்துக் கைதட்ட, இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையானது.
அடுத்த நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் அது குறித்த கேள்வியைப் பத்திரிகை நிருபர்கள் நிர்மலா சீதாராமனிடம் எழுப்பினர். அதற்கு, ‘‘அவர் ஜனரஞ்சகமாக பேசியதால் அனைவரும் சிரித்தனர். பலருக்கு அது ஊறுகாய் மாமியைக் கேள்வி கேட்டுட்டார் பாரு என ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை!’’ என பதிலளித்தார்.
இந்த நிலையில் அன்னபூர்ணா சீனிவாசன் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் நட்சத்திர ஓட்டல் அறையில் மன்னிப்புக் கோரும் வீடியோ வெளியானது.
அதில், ‘‘ஓட்டல் சங்கத்தவர்களே என்னைப் பேசச் சொன்னார்கள். நான் மீட்டிங்கிற்கு கூட வரவில்லை என்றுதான் சொன்னேன். வற்புறுத்தி அழைத்தார்கள். வந்தேன். அதனால் பேச வேண்டிய சூழலும் ஏற்பட்டு விட்டது. எனது தந்தை சுதந்திரப் போராட்டத் தியாகியாக இருந்தவர். நான் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டேன். அதற்காக என்னை மன்னியுங்கள். இரவு முழுவதும் தூக்கமே இல்லை. காலையிலிருந்து நிறையப் பத்திரிகை யாளர்கள் என்னை அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களை எல்லாம் தவிர்த்து விட்டேன்!’’ என்றெல்லாம் கூறுகிறார்.
நிர்மலாசீதாராமன்
பதிலுக்கு நிர்மலாசீதாராமன், ‘‘பொதுவாக ஓட்டலில் சாப்பிட்டவர்கள் பற்றி, நல்லதோ கெட்டதோ வெளியில் பேசுவது நாகரீகமாகாது. நீங்கள் உங்கள் எம்எல்ஏ-வை பற்றி ஜிலேபி சாப்பிடுறாங்க, சண்டை போடுறாங்க, ரெகுலராக வருவாங்க என சொன்னவுடன் எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. மற்றபடி நீங்கள் ஜிஎஸ்டி பற்றி என்ன கேட்டாலும் பதில் சொல்லி இருப்பேன்!’’ என்றும் தெரிவிக்கிறார்.
இந்த வீடியோ பாஜக ஐடி விங் வலைத்தளங்களில் வெளியாக, அதுவும் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தொழிலதிபர் மிரட்டப்பட்டார் என்ற விமர்சனங்கள் புறப்பட ஆரம்பித்து விட்டன.
ராகுல்காந்தி
முக்கியமாக ராகுல்காந்தி யிடமிருந்து, ‘கோடீஸ்வர நண்பர்களுக்காக விதிகளை மாற்றி சிவப்புக்கம்பளம் விரிக்கிறது அரசு. வரி விதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என சிறு, குறு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தால் மோடி அரசு ஆணவப் போக்குடன் நடந்து கொள்கிறது!’ என்ற கண்டனக் குரலும் புறப்பட்டது.
திமுக எம்பி கனிமொழி இந்த சம்பவத்தை ஒட்டி தனது வலைத்தள சுவரில், பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்ற குறளை மேற்கோள் காட்டி, ‘ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர் களும் தமிழர்களின் உணர்வை சீண்டாதிருக்க வேண்டும்!’’ என்று பதிவிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன்
இப்படி விவகாரம் வில்லங்கம், மேலும் வில்லங்கமாவதைத் தொடர்ந்து கோவையில் நிருபர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ‘தொழிலதிபர் சீனிவா சனை யாரும் மிரட்டவில்லை. அவராகவே வந்து என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.
நிதியமைச்சருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டேன். அவரை சந்தித்து நான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ரொம்பவும் வேண்டி கேட்டுக் கொண்டார். எனவேதான் அவரை அமைச்சரிடம் அழைத்துச் சென்றேன்!’ என்று சொன்னதோடு, ‘நான் எந்தக் காலத்திலும் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதில்லை. அந்த ஓனருடன் சண்டை போட்டதில்லை!’’ என்று தெரிவித்தார்.
ஆனாலும் தனிப்பட்ட முறையில் நிர்மலா, வானதி, சீனிவாசன் ஆகியோர் நட்சத்திர ஓட்டலில் நடந்த சந்திப்பை வீடியோ எடுத்தது யார்? அதை வலைத்தளங்களில் பதிவிட்டது யார்? என்ற கேள்விகள் வலைத்தளங்களில் விவாதப் பொருளாக, அதற்கு இங்கிலாந்திலிருந்து மன்னிப்புக் கோரியிருக்கிறார் பாஜக தமிழகத்தலைவர் அண்ணாமலை.
அண்ணாமலை
தனது எக்ஸ் பக்கத்தில் அவர், ‘‘தமிழக பாஜக சார்பில் அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் இடையே நடந்தது தனிப்பட்ட உரையாடல். அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் கட்சியினர் சார்பில் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அன்னபூர்ணா உணவகங்களின் உரிமைாளரான சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத செயலுக்கு வருத்தம் தெரிவித்தேன்.
அன்னபூர்ணா சீனிவாசன்
அண்ணா தமிழ்நாட்டின் தொழில்துறை
யில் தூணாக இருக்கிறார். மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் குறிப்பிடத்தக்க வகை
யில் பங்களிப்பு அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை மரியாதையுடன் இத்துடன் முடித்து வைக்க வேண்
டும் என்று அனைவரிடமும் கேட்டு கொள்
கிறேன்’’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதை யார் விட்டாலும் நெட்டிஷன்களும், எதிர்கட்சியினரும் விடுவதாயில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்
ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி உள்ளிட்ட பலர் தொழிலதிபரை அவமா
னப்படுத்திய நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இண்டியா கூட்டணி சார்பில் இந்த சம்பவத்தில் பாஜக அரசை கண்டித்து
கோவையில் ஆர்ப்பாட்டம் வைத்துள்ள
னர். அதையும் தாண்டி அன்னபூர்ணா ஓட்டல் பற்றியும் அதன் உரிமையாளர் குறித்தும் எதிர்மறையான விஷயங்
களும் வந்தபடி உள்ளன.
‘‘ஏழை எளியவர்களுக்காக அவர் என்ன பேசினார். ஜி.எஸ்.டியை அதிகமோ குறைவோ ஒரே மாதிரி வைக்கச் சொல்லித்தானே அவர் கோரினார். அப்படியிருக்க அவர் எப்
படி மக்களின் குரலாக ஒலித்திருக்க முடியும்? அவர் நடத்துவது உணவகமா,
பேக்கரியா, ஸ்வீட் ஸ்டாலா? தங்கும் விடுதியா? ஒரே இடத்தில் மூன்று விதமான தொழில் செய்தால் மூன்று விதமான ஜிஎஸ்டி வரத்தானே செய்யும்? அன்னபூர்ணா த்ரீ இன் ஒன் தொழில் செய்வதற்காக ஒரே வரி விதிப்பு செய்ய முடியுமா? சாதாரணமாக தன் கடைகளில் 2 இட்லி சாம்பார், ஒரு காப்பிக்கு ரூ.95/-க்கும், ஏர்போர்ட்ல ஒரு காப்பியை ரூ.120/- விற்கும் இவர்கள் – 300 சதவீதம்
லாபம் வைத்து 4500 பேரை வேலைக்கு
வைத்து தினசரி 1 லட்சம் வாடிக்கை
யாளர்களிடம் கோடி, கோடியாய் சம்பாதிக்கும் இவர்கள் கடை நடத்த முடியவில்லை என புலம்புவது வேடிக்
கையானது!’’ என்றெல்லாம் வலைத்
தளங்களில் விவகாரத்தை பொளந்து கட்டி வருகின்றனர் நெட்டிஷன்கள்.