நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. மக்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப் பட பகுதியில் மூர்வணக் கொடி படத்தை வைப்பதையும், தங்கள் வீடுகள், தெருக்களில் மூர்வணக்கொடியை ஏற்றுவதையும் இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது. இந்நிலையில், சமூக ஊடக தளங்களில் மூவர்ணக் கொடியுடன் கூடிய தங்களது சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திரு மோடி தனது சுயவிவரப் படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றினார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தங்கள் யவிவரப் படங்களை மாற்றி உள்ளனர்.
சுதந்திர தினத்தன்று வீடுகளில் மூவர்ணக் கோடி ஏற்றுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு…………

Leave a Reply